color
Male , 52

ziaudeen's Blog

பசிபிக் பெருங்கடலில் மிதந்து வரும் எரிமலையால் உருவான நுரைக்கல் படிமங்கள், 11 '12 Subject: My first blog, Viewed by: 52

பசிபிக் பெருங்கடலில் சுமார் 26,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு எரிமலை பாறைகளால் ஆன பெரிய திட்டு ஒன்று மிதந்து வருவதாக நியூசிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது. எரிமலையிலிருந்து வெளியான குழம்பு காற்றுக் குமிழிகளுடன் இறுகிப் போய் நுரைக்கல் படிமங்கள் உருவாகி உள்ளன. இந்த சிறிய துண்டுகள் நெருக்கமாக இணைந்து, 26000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பெரிய திட்டாக மாறி பசிபிக் பெருங்கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. இப்படியான ஒரு திட்டு கடலில் மிதந்து வருவதை தமது 18 ஆண்டுகால கடல் பயணத்தில் தான் கண்டதில்லை என்று நியூசிலாந்து கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த எரிமலை பாறைத் திட்டுக்கல் கடலில் பெரிய ஐஸ் படலம் மிதந்து வருவது போல இருந்தாலும், அதனால் கப்பல்துறைக்கு எந்த அபயாமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. கடலுக்கு கீழே இருக்கும் எரிமலையிலிருந்து இந்தப் பாறைகள் வந்திருக்கலாம் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
Love it
Loading.. people love it
Leave your Comment

Got a problem?

For general inquiries or to request support with your Indyarocks account, write us at support@indyarocks.com

Spread your word:

Facebook Twitter

2013 () All rights reserved
color